tamilni 386 scaled
சினிமாசெய்திகள்

திருமணத்திற்கு பின் 65 கிலோவை சுமக்கும் ரகுல் ப்ரீத் சிங் .. வைரல் வீடியோ..!

Share

நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர் 65 கிலோ எடையை தூக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்து வரும் ரகுல் ப்ரீத் சிங், தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு ’யுவா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’தடையறத் தாக்க’ ’என்னமோ ஏதோ’ உள்பட சில தமிழ் படங்களில் மட்டும் நடித்தார்.

அதன் பிறகு அவர் தெலுங்கில் ரகுல் ப்ரீத் சிங் பிஸியான நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின் கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆனார். அதன் பின்னர் கார்த்தி நடித்த ’தேவ்’ சூர்யா நடித்த ’என்ஜிகே’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தற்போது சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ’அயலான்’ படத்தில் தாரா என்ற முக்கிய கேரக்டரில் நடித்தார்.

தற்போது அவர் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ உட்பட சில படங்களில் நடித்து வரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஜாக்கி பாக்லானி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் கோவாவில் நடந்த இந்த திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் ரகுல் ப்ரீத் சிங் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக உள்ளார் என்பதும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் மட்டும் 23 மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 65 கிலோ எடை தூக்கும் வீடியோவையும், ரிஸ்க் எடுத்து வொர்க் அவுட் செய்யும் வீடியோவையும் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...