நடிகர் ராகவா லாரன்ஸ் சினிமாவில் ஹீரோவாக நடிப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை பல ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
ஆட்டோ டியூ கட்ட முடியாதவர்களுக்கு அதை கட்டுவது, ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வாகனம், விவசாயிகளுக்கு ட்ராக்டர் என பல்வேறு உதவிகளை அவர் செய்து வருகிறார்.
ஏற்கனவே லாரன்ஸ் தன் கைவசம் பல படங்கள் வைத்து இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு புது அறிவிப்பை அவர் வெளியிட்டு இருக்கிறார்.
ராகவா லாரன்ஸ் தனது சொந்த தயாரிப்பில் இரண்டு புது படங்கள் அடுத்து எடுக்கப்போவதாக அறிவித்து இருக்கிறார்.
படங்கள் பற்றிய அறிவிப்பு நாளை அதிகாரபூர்வமாக வெளியாகும் என அவர் கூறி இருக்கிறார்.