24 6620e75e93245
சினிமாசெய்திகள்

புஷ்பா 2 படத்தின் வசூல் வேட்டை ஆரம்பம்.. ரஜினி கூட இந்த சாதனையை செய்தது இல்லை

Share

புஷ்பா 2 படத்தின் வசூல் வேட்டை ஆரம்பம்.. ரஜினி கூட இந்த சாதனையை செய்தது இல்லை

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா தி ரைஸ். இப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வெளிவரவுள்ளது.

புஷ்பா 2 தி ரூல் படத்தின் டீசர் சமீபத்தில் அல்லு அர்ஜுன் பிறந்தநாள் அன்று வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், சிலர் இந்த டீசர் சுமார் தான் என்றும் கமெண்ட் செய்தனர். முதல் பாகத்தின் மீது எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்ததோ, அதை விட 100 மடங்கு எதிர்பார்ப்பு இரண்டாம் பாகத்தின் மீது உள்ளது.

முதல் பாகத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி படத்தின் வெற்றிக்கு மிகமுக்கிய காரணமாக இருந்த சமந்தா, இரண்டாம் பாகத்தில் இல்லை என கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக மற்றொரு சென்சேஷனல் நாயகி ஒருவர் நடனமாடவுள்ளார் என சொல்லப்படுகிறது.

மேலும் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில், ஜெகதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் புஷ்பா 2 படத்தில் நடிக்கிறார்கள். வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் இதுவரை எந்த நடிகரின் திரைப்படத்திற்கும் கொடுக்காத தொகையை கொடுத்து வாங்கியுள்ளதாம்.

கிட்டத்தட்ட ரூ. 275 கோடி வரை கொடுத்து இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் வசூல் மன்னர்களின் ஒருவரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கே இந்த அளவிற்கு எந்த நிறுவனமும் பணம் கொடுத்து ஓடிடி உரிமையை வாங்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...

25 6918218c86028
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞன் எதிர்வரும் நவம்பர் 28 வரை விளக்கமறியலில்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம்...

25 68f5630be3ac6
செய்திகள்இலங்கை

இலங்கைச் சிறைச்சாலைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்: 37,000 கைதிகள் அடைப்பு – ‘500 பேர் நின்று உறங்குகிறார்கள்’ எனப் பாராளுமன்றில் அம்பலம்!

இலங்கைச் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாகக் கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள்...

Election Commission 1
இலங்கைஅரசியல்செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025: தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக ஆரம்பம் – பெயர் சேர்க்க ஊடகங்களுக்கு நேரடிப் பொறுப்பு!

2025ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளைத் (Voter Register Revision) தேர்தல்கள் ஆணைக்குழு...