சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது. அதனாலேயே தமிழ் பேசும் நடிகைகளை விட கேரளா அல்லது வட நாட்டில் இருந்து வரும் ஹீரோயின்களுக்கு தான் இங்கே வாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் ரெட்ரோ படத்தில் நடிகை பூஜா ஹெக்டேவை கருப்பாக காட்டி நடிக்க வைத்து இருந்தனர்.
“இந்த கலரில் தான் வேண்டும் என்றால் நிஜத்திலேயே அப்படி இருக்கும் ஹீரோயினை தேர்வு செய்திருக்கலாமே, பூஜா ஹெக்டேவை அவர் கலரியிலே விடுங்க. இந்த பாயிண்ட் job மோசமாக இருக்கிறது” என ஒருவர் ட்விட்டரில் கலாய்த்து இருக்கிறார்.
அதற்கு நடிகை பிரியா ஆனந்த் சிரிப்பது போன்ற எமோஜியை பதிவிட்டு இருக்கிறார்.