6 1
சினிமாசெய்திகள்

ரஜினிகாந்த் உடன் அடுத்த படத்தை உறுதி செய்த இயக்குனர் நெல்சன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Share

ரஜினிகாந்த் உடன் அடுத்த படத்தை உறுதி செய்த இயக்குனர் நெல்சன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

மேலும் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாகவும் மாறியது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஜெயிலர் 2 படத்தை இயக்க இயக்குனர் நெல்சன் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் ஜெயிலர் 2 குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நெல்சன் திலீப்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினியுடன் தனது அடுத்த படத்தை குறித்து பேசியுள்ளார்.

இதில் கூலி படத்தை முடித்தவுடன் ரஜினி சாறுடன் படம் பண்ணுவதாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கூறியுள்ளார். ஆனால், அது ஜெயிலர் 2 என அவர் குறிப்பிடவில்லை.

ஏற்கனவே வெளிவந்த ஜெயிலர் 2 குறித்த தகவல்கள், தற்போது நெல்சன் கூறியுள்ளதை எல்லாம் வைத்து இது ஜெயிலர் 2 தான் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து எப்போது அறிவிப்பு வெளியாகிறது என்று.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...