6 1
சினிமாசெய்திகள்

ரஜினிகாந்த் உடன் அடுத்த படத்தை உறுதி செய்த இயக்குனர் நெல்சன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Share

ரஜினிகாந்த் உடன் அடுத்த படத்தை உறுதி செய்த இயக்குனர் நெல்சன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

மேலும் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாகவும் மாறியது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஜெயிலர் 2 படத்தை இயக்க இயக்குனர் நெல்சன் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் ஜெயிலர் 2 குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நெல்சன் திலீப்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினியுடன் தனது அடுத்த படத்தை குறித்து பேசியுள்ளார்.

இதில் கூலி படத்தை முடித்தவுடன் ரஜினி சாறுடன் படம் பண்ணுவதாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கூறியுள்ளார். ஆனால், அது ஜெயிலர் 2 என அவர் குறிப்பிடவில்லை.

ஏற்கனவே வெளிவந்த ஜெயிலர் 2 குறித்த தகவல்கள், தற்போது நெல்சன் கூறியுள்ளதை எல்லாம் வைத்து இது ஜெயிலர் 2 தான் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து எப்போது அறிவிப்பு வெளியாகிறது என்று.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...