10 13 scaled
சினிமாசெய்திகள்

இரட்டை குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன்தாரா

Share

இரட்டை குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன்தாரா

லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது ஜவான் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா 75 மற்றும் டெஸ்ட் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

நடிகை நயன்தாரா கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இதன்பின், வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார்.

அவ்வப்போது நயன்தாரா தன்னுடைய மகன்களுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகும். அதை விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியிடுவார்.

ஆனால், இனிமேல் நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தான் அந்த புகைப்படங்கள் எல்லாம் வெளிவரப்போகிறது. ஆம், நடிகை நயன்தாரா முதல் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார்.

ரஜினியின் ஜெயிலர் படம் பிஜிஎம் போட்டு தனது இரட்டை மகன்களுடன் மாஸ் என்ட்ரி கொடுக்கும் வீடியோவை நயன் தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். மேலும் முதல் முறையாக தன்னுடைய மகன்களின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....