மாடலிங் துறையில் இருந்து இப்போது நடிகராக வளர்ந்துள்ளார் முசமில் இப்ராஹிம். இவர் நடிகை தீபிகா படுகோனை 2 ஆண்டுகள் காதலித்து வந்ததாகவும், பின் பிரேக் அப் செய்துவிட்டதாகவும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகை தீபிகா படுகோன் 2000ம் ஆண்டு மும்பைக்கு வந்துள்ளார். அதன்பின் மாடலிங் துறையில் வெற்றிகரமாக இயங்கி, பின் பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். அந்த காலகட்டத்தில் முசமில் இப்ராஹிம் மற்றும் தீபிகா படுகோன் காதலித்துள்ளனர்.
இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் முசமில் இப்ராஹிம் வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது “நாங்கள் இரண்டு ஆண்டுகள் காதலித்தோம். தீபிகா மிகவும் உறுதியாக இருந்தார். ஏனென்றால் அவர் இறகுப்பந்து வீரர் பிரகாஷ் படுகோனின் மகள். அவரை அனைவருக்கும் தெரியும். அப்போது நான் ஸ்டாராக இருந்தேன். தீபிகா சாதாரணமாக இருந்தார். இப்போது அவர் சூப்பர்ஸ்டாராகிவிட்டார். என்னை யாருக்கும் தெரியவில்லை” என கூறியுள்ளார்.
டேட்டிங் குறித்து பேசிய முசமில் இப்ராஹிம், “அப்போது சிறுவர்களாக இருந்தோம். மலையில் ரிக்ஷவில் டேட்டிங், அது க்யூட்டாக இருக்கும். நான் அப்போது அவரை விட அதிகம் சம்பாதித்து வந்தேன். நான் கார் வாங்கியபோது அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதன்பின், நான் ரிக்ஷவில் டேட்டிங் சென்றதே இல்லை. அந்த நினைவுகள் மிகவும் புத்துணர்வாக இருக்கின்றன. பணம் இல்லாமலும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்” என்றார்.
மேலும் முசமில் இப்ராஹிம், அவர்தான் நடிகை தீபிகாவை பிரேக் அப் செய்ததாகவும் கூறியுள்ளார்.