yj26 1717312600
சினிமாசெய்திகள்

சில்க் ஸ்மிதா என்றாலே படப்பிடிப்பில் அந்த விஷயம் நடக்கும்- முதன்முறையாக கூறியுள்ள மைக் மோகன்

Share

சில்க் ஸ்மிதா என்றாலே படப்பிடிப்பில் அந்த விஷயம் நடக்கும்- முதன்முறையாக கூறியுள்ள மைக் மோகன்

சினிமாவில் 80களில் இளைஞர்களை கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா.

இவர் இல்லை என்றாலும் எப்போதும் இவர் மக்களிடம் ஸ்பெஷல் தான். வசீகரிக்கும் கண்கள், அழகான சிரிப்பு என ரசிகர்களை கவர்ந்தவர்.

இவரது பிறந்தநாள், நினைவு நாள் வரும் போதெல்லாம் பிரபலங்கள் அவரைப் பற்றி மக்களுக்கு தெரியாத நிறைய நல்ல விஷயங்களை பகிர்ந்த வண்ணம் இருப்பார்கள்.

அப்படி தற்போது ஒரு பிரபல நடிகர் சில்க் ஸ்மிதா குறித்து பேசியுள்ளார்.

இவருக்கு ஒரு அறிமுகம் கொடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.

மைக் மோகனாக வலம் வரும் இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது ஹரா என்ற படத்தில் நடித்துள்ளார், படத்தின் புரொமோஷனுக்காக நிறைய ரியாலிட்டி ஷோ, பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

அப்படி ஒரு பேட்டியில் மோகன், சில்க் ஸ்மிதா குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், படங்களில் வேண்டுமென்றால் சில்க் ஸ்மிதா கிளாமராக நடிக்கலாம், நிஜத்தில் மிகவும் நல்லவர். எனக்கு அவரை நன்றாகவே தெரியும், நான் அவருடைய நடிப்பு மற்றும் அவருடைய கேரக்டரை பார்த்து வியந்து போய் இருக்கிறேன்.

சில்க் ஸ்மிதா படப்பிடிப்பு என்றாலே ரசிகர்களை தாண்டி தயாரிப்பாளர்கள், பைனான்ஸியர்கள் என பலர் வந்து காத்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் எந்த இடத்திலும் சில்க் ஸ்மிதா அலட்டிக்கவே மாட்டார், ரொம்ப ரொம்ப சாதாரணமா பழகுவாங்க, அவங்க இல்லை என்பது இப்பவும் ஏற்றுக்கொள்ள கஷ்டமா தான் இருக்கு என பேசியுள்ளார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...