24 6656ce5dd16c5
சினிமாசெய்திகள்

பல்லாயிரம் கோடிகளை நன்கொடையாக வாரி வழங்க திட்டமிட்டுள்ள பெண்மணி யார் அவர்?

Share

பல்லாயிரம் கோடிகளை நன்கொடையாக வாரி வழங்க திட்டமிட்டுள்ள பெண்மணி யார் அவர்?

பெண்கள் நலனுக்காக, பல்லாயிரம் கோடிகளை நன்கொடையாக வாரி வழங்க திட்டமிட்டுள்ளார் ஒரு பெண்மணி. அவர், பிரபல உலக கோடீஸ்வரர் பில் கேட்ஸின் முன்னாள் மனைவியான மெலிண்டா கேட்ஸ்!

உலக கோடீஸ்வரர் பில் கேட்ஸின் முன்னாள் மனைவியான மெலிண்டா கேட்ஸ் (Melinda French Gates), அடுத்த இரண்டு ஆண்டுகளில், பெண்கள் மற்றும் குடும்ப நலனுக்காக உழைக்கும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஒரு பில்லியன் டொலரை நன்கொடையாக வழங்க இருக்கிறார்.

ஒரு பில்லியன் டொலர் என்பது, இலங்கை மதிப்பில் சுமார் 3,02,73,40,00,000.00 ரூபாய் ஆகும்.

மெலிண்டாவும் அவரது கணவரான பில் கேட்ஸும் திருமணமாகி 27 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நிலையில், 2021ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். தம்பதியருக்கு முன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.

மெலிண்டா இப்படி கோடிகளை தானமாக வழங்குவது, கடந்த ஐந்து ஆண்டுகளில் இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே, 2019ஆம் ஆண்டு, 10 ஆண்டுகளுக்கு பெண்கள் உரிமைகளுக்காக வாரி வழங்குவதாக அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மெலிண்டாவின் சொத்து மதிப்பு, 11 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

13 2
பொழுதுபோக்குசினிமா

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: பழைய கசப்பான நினைவுகளைக் கடந்த நட்சத்திர ஜோடி!

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நீண்ட கால வதந்திகளுக்கு...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...