24 661e5a69cb59e
சினிமாசெய்திகள்

வாரிசு நடிகரை ஆபிஸுக்கு அழைத்து அவமானப்படுத்தினாரா மணி ரத்னம்.. கோபத்தில் வெளியேறிய நடிகர்

Share

வாரிசு நடிகரை ஆபிஸுக்கு அழைத்து அவமானப்படுத்தினாரா மணி ரத்னம்.. கோபத்தில் வெளியேறிய நடிகர்

இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணி ரத்னம். கடைசியாக பொன்னியின் செல்வன் படம் மூலம் மாபெரும் வெற்றியை கொடுத்தார்.

இதை தொடர்ந்து தற்போது கமலுடன் தக் லைஃப் படத்திற்காக கைகோர்த்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், படத்தில் கமிட்டாகி நடிக்கவிருந்த துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது இருவரும் மீண்டும் படத்தில் இணைந்துவிட்டார்களாம்.

இதில் நடிகர் துல்கர் சல்மான் வெளியேறியதற்கு காரணம் மணி ரத்னம் செய்த விஷயம் தான் என திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. துல்கர் சல்மானை தனது ஆபிஸுக்கு அழைத்துள்ளார். ஆனால், இயக்குனர் மணி ரத்னம் அதே ஆபிஸில் இருந்துகொண்டு துல்கர் சல்மானிடம் வந்த பேசவில்லையாம்.

தன்னுடைய துணை இயக்குனரை அனுப்பிவைத்தாராம். இதனால் கடுப்பாகி தான் துல்கர் சல்மான் தக் லைஃப் படத்திலிருந்து வெளியேறிவிட்டார் என சொல்லப்படுகிறது. பின் மணி ரத்னத்தின் மனைவியும், பிரபல நடிகையுமான சுஹாசினி, துல்கர் சல்மானிடம் பேசி படத்தில் மீண்டும் இணைய வைத்துள்ளார் என பேசப்பட்டு வருகிறது.

ஆனால், மணி ரத்னம் அப்படி செய்யக்கூடிய நபர் இல்லை என்றும், இதுபோல் ஒரு விஷயம் நடக்கவே இல்லை , இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது. இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...