5 63
சினிமாசெய்திகள்

பிரபல நடிகர் மரணம்.. ஹோட்டல் ரூமில் சடலமாக மீட்பு

Share

பிரபல நடிகர் மரணம்.. ஹோட்டல் ரூமில் சடலமாக மீட்பு

மலையாள திரையுலகை சேர்ந்த நடிகர் திலீப் சங்கரின் (வயது 54) மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் திலீப் சங்கர்.

இவர் மலையாளத்தில் வெளிவந்த பஞ்சாக்னி, சுந்தரி போன்ற பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் சில திரைப்படங்களிலும் திலீப் சங்கர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாக்னி சீரியலின் படப்பிடிப்பிற்காக நடிகர் திலீப் சங்கர், எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்றுள்ளார். படப்பிடிப்பு இரண்டு நாள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கேயே ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளார்.

இதன்பின் இரண்டு நாட்களாக அவரை படப்பிடிப்பு குழு தொடர்ப்பு கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகப்பட்டு போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அங்கு வந்த போலீஸ் ஹோட்டல் ரூம் கதவை உடைத்து பார்த்ததில், திலீப் சங்கர் சடலமாக இருந்தது தெரியவந்துள்ளது. இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதே பரிசோதனையின்படி,மரணத்திற்கான காரணம், உள் இரத்தப்போக்கு, கீழே விழுந்தபோது தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக இருக்கலாம்.

மேலும் நடிகர் திலீப் சங்கர் கலீரல் தொடர்பான பிரச்சனையால் உடல்நல பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
w 412h 232imgid 01j9e8833zvmskxd27dc9gr2peimgname 310 job vacancies in uae and odepec conducts recruitment with free visa accomodation and insurance
செய்திகள்இலங்கை

ரூ. 740 மில்லியனுக்கும் அதிகமான மோசடி: ருமேனிய வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் விளக்கமறியலில்!

ருமேனியாவில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, வேலை தேடுபவர்களிடமிருந்து 740 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக மோசடி...

25 690615b57da4a
செய்திகள்இலங்கை

மோசமான நிர்வாகத்தின் விளைவு: இலங்கை ஆட்சி மாற்றம் குறித்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கருத்து!

வங்கதேசம், இலங்கை மற்றும் நேபாளத்தில் சமீபத்திய ஆட்சி மாற்றங்கள் மோசமான நிர்வாகத்தின் விளைவுகளை எடுத்துக்காட்டுகின்றன என்று...

23 64e4c01e53a82
செய்திகள்இலங்கை

இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தும் 25 முக்கிய கடத்தல்காரர்கள் அடையாளம்: அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள்!

இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 25 முக்கிய கடத்தல்காரர்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாகப் பொதுப்...

images 4
செய்திகள்இலங்கை

பெரிய வெங்காயம் கொள்வனவில் அளவு அளவிடப்படுவதில்லை: ‘கண் மட்டத்தில்’ மட்டுமே ஆய்வு – லங்கா சதோச விளக்கம்!

விவசாயிகளிடமிருந்து பெரிய வெங்காயத்தைப் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ள லங்கா சதோச கொள்வனவு செய்யப்படும் வெங்காயத்தின் அளவு...