5 63
சினிமாசெய்திகள்

பிரபல நடிகர் மரணம்.. ஹோட்டல் ரூமில் சடலமாக மீட்பு

Share

பிரபல நடிகர் மரணம்.. ஹோட்டல் ரூமில் சடலமாக மீட்பு

மலையாள திரையுலகை சேர்ந்த நடிகர் திலீப் சங்கரின் (வயது 54) மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் திலீப் சங்கர்.

இவர் மலையாளத்தில் வெளிவந்த பஞ்சாக்னி, சுந்தரி போன்ற பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் சில திரைப்படங்களிலும் திலீப் சங்கர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாக்னி சீரியலின் படப்பிடிப்பிற்காக நடிகர் திலீப் சங்கர், எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்றுள்ளார். படப்பிடிப்பு இரண்டு நாள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கேயே ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளார்.

இதன்பின் இரண்டு நாட்களாக அவரை படப்பிடிப்பு குழு தொடர்ப்பு கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகப்பட்டு போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அங்கு வந்த போலீஸ் ஹோட்டல் ரூம் கதவை உடைத்து பார்த்ததில், திலீப் சங்கர் சடலமாக இருந்தது தெரியவந்துள்ளது. இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதே பரிசோதனையின்படி,மரணத்திற்கான காரணம், உள் இரத்தப்போக்கு, கீழே விழுந்தபோது தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக இருக்கலாம்.

மேலும் நடிகர் திலீப் சங்கர் கலீரல் தொடர்பான பிரச்சனையால் உடல்நல பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...