5 63
சினிமாசெய்திகள்

பிரபல நடிகர் மரணம்.. ஹோட்டல் ரூமில் சடலமாக மீட்பு

Share

பிரபல நடிகர் மரணம்.. ஹோட்டல் ரூமில் சடலமாக மீட்பு

மலையாள திரையுலகை சேர்ந்த நடிகர் திலீப் சங்கரின் (வயது 54) மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் திலீப் சங்கர்.

இவர் மலையாளத்தில் வெளிவந்த பஞ்சாக்னி, சுந்தரி போன்ற பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் சில திரைப்படங்களிலும் திலீப் சங்கர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாக்னி சீரியலின் படப்பிடிப்பிற்காக நடிகர் திலீப் சங்கர், எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்றுள்ளார். படப்பிடிப்பு இரண்டு நாள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கேயே ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளார்.

இதன்பின் இரண்டு நாட்களாக அவரை படப்பிடிப்பு குழு தொடர்ப்பு கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகப்பட்டு போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அங்கு வந்த போலீஸ் ஹோட்டல் ரூம் கதவை உடைத்து பார்த்ததில், திலீப் சங்கர் சடலமாக இருந்தது தெரியவந்துள்ளது. இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதே பரிசோதனையின்படி,மரணத்திற்கான காரணம், உள் இரத்தப்போக்கு, கீழே விழுந்தபோது தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக இருக்கலாம்.

மேலும் நடிகர் திலீப் சங்கர் கலீரல் தொடர்பான பிரச்சனையால் உடல்நல பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...