17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

Share

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும் மூழ்கியுள்ளது. ரசிகர்களை கவர்ந்த சில பிரபலங்கள் மீது தற்போது போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனால், திரையுலகத்தில் நம்பிக்கை இழப்பும்,கவலையும் ஏற்படத் தொடங்கியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் “நம்மட ஹீரோக்கள் இப்புடியா?” என்ற ஏமாற்றம் பெருகிக் கொண்டே வருகிறது. இந்த சர்ச்சையில் தற்போது மிகுந்த விவாதத்துக்குள்ளானவர்கள் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா.

ஒருகாலத்தில் தமிழ் திரையுலகில் முக்கிய இடம் பிடித்த நடிகராக விளங்கியவர் ஸ்ரீகாந்த். சமீப காலமாக வாய்ப்புகள் குறைந்திருந்தாலும், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். அத்துடன், நடிகர் கிருஷ்ணாவும் பல படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியிருந்தார்.

தற்பொழுது இருவருமே போதைப்பொருள் வழக்கில் விசாரணைக்கு உட்பட்டனர். இதனிடையே அவர்களது கைதுகள், விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் போன்றவை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் சமீபத்தில் நடைபெற்ற ஒரு ஊடக சந்திப்பில்,போதைப்பொருள் வழக்குகள் மற்றும் நடிகர்கள் பற்றிய கேள்விக்கு சிறப்பாக பதிலளித்திருந்தார். அதன்போது மாரி செல்வராஜ், “யாரு பண்ணாலும் தப்பு, தப்பு தானே. நடிகர் என்றால் தப்பு பண்ணலாமா? சட்ட விரோதமா செய்யுற எல்லாமே தப்பு தான்.” எனவும் கூறியிருந்தார். இந்தக் கருத்துகள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...