மலையாளத் திரையுலகில் பெரும் சோகம்: பன்முகக் கலைஞர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

w 1280h 720format jpgimgid 01kcwwmmtwgfbhewmpdkn3k80gimgname sreenivasan 1766201119580

மலையாளத் திரையுலகின் மிகச்சிறந்த நடிகரும், இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான ஸ்ரீனிவாசன் (Sreenivasan), இன்று உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 69.

கடந்த சில நாட்களாகக் கடும் உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்ரீனிவாசன் மலையாளம் மற்றும் தமிழ் உட்பட 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி, தென்னிந்தியத் திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர்.

சிறந்த நடிகர் என்பதைத் தாண்டி, கூர்மையான சமூக நையாண்டி கொண்ட கதைகளை எழுதும் எழுத்தாளராகவும், வெற்றிகரமான இயக்குநராகவும் அவர் போற்றப்பட்டார்.

அவரது கலைச் சேவையைப் பாராட்டி இந்திய அரசின் தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில விருதுகள் மற்றும் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் எனப் பல கௌரவங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஒரு தயாரிப்பாளராகவும் எழுத்தாளராகவும் அவர் ஆற்றிய பணிக்காகப் பல வாழ்நாள் சாதனையாளர் விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.

அவரது மறைவு மலையாளத் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. திரையுலகைச் சேர்ந்த பலரும், ரசிகர்களும் அவரது மறைவுக்குத் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

Exit mobile version