28
சினிமாசெய்திகள்

ஆஸ்கர் அங்கீகாரம் பெற்ற கமல்.! – ஸ்டாலின் வாழ்த்துக்கு எமோஷனல் பதில் கூறிய உலகநாயகன்.!

Share

தமிழ் சினிமா மட்டும் இல்லாமல், இந்திய சினிமாவே பெருமையாக எண்ணும் கலைஞானி கமல்ஹாசனுக்கு, இந்த ஆண்டின் ஆஸ்கர் அகாடமி விழாவில் (Academy of Motion Picture Arts and Sciences) கலந்து கொள்ளும் பிரமாண்டமான அழைப்பு கிடைத்துள்ளது. இது தமிழர்களுக்கு பெருமையைத் தரும் ஒரு தருணமாக மாறியுள்ளது.

இந்திய திரைத்துறையின் முக்கிய முகமாக விளங்கும் கமல்ஹாசன், பல்வேறு தளங்களில் சினிமாவை ஒரு கலை வடிவமாக உயர்த்தி, உலக அளவில் ஏராளமான பாராட்டுகளைப் பெற்றவர். அவரது “நாயகன்”, “சகலகலா வல்லவன்”, “தசாவதாரம்” போன்ற படங்கள் சினிமாவின் எல்லைகளை தாண்டிச் சென்றவை.

அந்த வகையில், கமல்ஹாசனுக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் இந்திய சினிமாவிற்கு, குறிப்பாக தமிழ் சினிமாவிற்கு கிடைக்கும் சர்வதேச அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில், “உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் – கலைஞானி கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்!” என்ற பதிவினை வெளியிட்டிருந்தார்.

முதலமைச்சரின் வாழ்த்துகளை பெற்றதும், கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் தற்பொழுது பதில் அளித்துள்ளார். அதன்போது, “ஆஸ்கர் அமைப்பின் அழைப்பு ஒரு மகிழ்வென்றால், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துச் சொற்கள் மேலும் மகிழ்வு. மிக்க நன்றி.” எனக் கூறியுள்ளார். இந்த கருத்துகள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...