28
சினிமாசெய்திகள்

ஆஸ்கர் அங்கீகாரம் பெற்ற கமல்.! – ஸ்டாலின் வாழ்த்துக்கு எமோஷனல் பதில் கூறிய உலகநாயகன்.!

Share

தமிழ் சினிமா மட்டும் இல்லாமல், இந்திய சினிமாவே பெருமையாக எண்ணும் கலைஞானி கமல்ஹாசனுக்கு, இந்த ஆண்டின் ஆஸ்கர் அகாடமி விழாவில் (Academy of Motion Picture Arts and Sciences) கலந்து கொள்ளும் பிரமாண்டமான அழைப்பு கிடைத்துள்ளது. இது தமிழர்களுக்கு பெருமையைத் தரும் ஒரு தருணமாக மாறியுள்ளது.

இந்திய திரைத்துறையின் முக்கிய முகமாக விளங்கும் கமல்ஹாசன், பல்வேறு தளங்களில் சினிமாவை ஒரு கலை வடிவமாக உயர்த்தி, உலக அளவில் ஏராளமான பாராட்டுகளைப் பெற்றவர். அவரது “நாயகன்”, “சகலகலா வல்லவன்”, “தசாவதாரம்” போன்ற படங்கள் சினிமாவின் எல்லைகளை தாண்டிச் சென்றவை.

அந்த வகையில், கமல்ஹாசனுக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் இந்திய சினிமாவிற்கு, குறிப்பாக தமிழ் சினிமாவிற்கு கிடைக்கும் சர்வதேச அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில், “உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் – கலைஞானி கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்!” என்ற பதிவினை வெளியிட்டிருந்தார்.

முதலமைச்சரின் வாழ்த்துகளை பெற்றதும், கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் தற்பொழுது பதில் அளித்துள்ளார். அதன்போது, “ஆஸ்கர் அமைப்பின் அழைப்பு ஒரு மகிழ்வென்றால், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துச் சொற்கள் மேலும் மகிழ்வு. மிக்க நன்றி.” எனக் கூறியுள்ளார். இந்த கருத்துகள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

Share

Recent Posts

தொடர்புடையது
Mari Selvaraj Interview
பொழுதுபோக்குசினிமா

நடித்தால் சுலபமாக கடவுள் ஆகி விடலாம்; ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” – நடிகர் ஆவது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்!

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ போன்ற...

25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...