24 665ea91ba1a28
சினிமாசெய்திகள்

திருமணத்திற்கு பின் அது கிடைப்பது இல்லை.. நயன்தாரா பற்றி பேசிய நடிகை காஜல் அகர்வால்

Share

திருமணத்திற்கு பின் அது கிடைப்பது இல்லை.. நயன்தாரா பற்றி பேசிய நடிகை காஜல் அகர்வால்

தென்னிந்திய அளவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் தற்போது  இந்தியன் 2 மற்றும் 3 ஆகிய படங்கள் உருவாகியுள்ளது.

சமீபத்தில் நடந்த  இந்தியன் 2 இசை வெளியிட்டு விழாவில் காஜல் கலந்துகொண்டு இருந்தார். திருமணமாகி குழந்தை பிறந்த பிப்பும் பிசியாக நடித்து வரும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

“பாலிவுட் சினிமாவிற்கு தென்னிந்திய சினிமாவிற்கும் இடையே நிறைய பாகுபாடு இருக்கிறது. இந்தியில் திருமணத்திற்கு பின்பும் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். தீபிகா படுகோன், ஆலியா பட் ஆகியோரும் நல்ல கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்”.

“ஆனால், தென்னிந்திய சினிமாவில் திருமணமான நடிகைகளுக்கு படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைப்பது இல்லை. இந்த விஷயத்தில் நடிகை நயன்தாரா விதிவிலக்காக இருக்கிறார். அவருடைய படங்கள் தேர்வும், கதை தேர்வும் எனக்கு பிடித்த விஷயம். திருமணமான நடிகைகளை தென்னிந்திய சினிமா ஓரம் காட்டுகிறது. இந்த நிலையை விரைவில் மாற்றுவோம்”.

“இந்த தலைமுறை நடிகைகள் திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் கூட நடித்து வருகிறார்கள். ரசிகர்களின் பார்வையில் மாறி இருக்கிறது. நல்ல கதை உள்ள படங்களில் யார் நடித்தாலும் அவர்கள் அதனை ரசித்து பார்க்கிறார்கள்” என காஜல் அகர்வால் பேசியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
24 6718a970f1422
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு தாழங்குடாவில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதல்: சஹ்ரான் குழுவின் வெடிகுண்டு சோதனை நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பரபரப்பு!

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் சஹ்ரான் குழுவினரால் வெடிகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தை அண்மித்த ஒரு...

Romance Scams in Canada 1024x560 1
செய்திகள்உலகம்

கனடா ஒன்றாரியோவில் மோசடிகள் அதிகரிப்பு: நோர்த் பேயில் ஒருவரிடம் $250,000 மோசடி – காவல்துறை எச்சரிக்கை!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த...

images 9
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலில் இரசாயனம் கலந்த நீர்த்தாரை தாக்குதல்: 3 இலங்கை பணியாளர்கள் பாதிப்பு – பாதுகாப்பிற்கு தூதரகம் கோரிக்கை!

இஸ்ரேலில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட இரசாயனம் கலந்த நீர்த்தாரைப் பிரயோகத்தின் (Chemical Spray/Water...

images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...