சினிமாசெய்திகள்

என் திருமணம் அந்த இடத்தில் தான்.. தமிழ் பெண் என நிரூபிக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

Share

என் திருமணம் அந்த இடத்தில் தான்.. தமிழ் பெண் என நிரூபிக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தற்போது ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கிறார். அவர் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கே பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

ஜான்வி கபூர் தற்போது தெலுங்கிலும் அறிமுகம் ஆகி இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அடுத்து அவர் தமிழுக்கு எப்போது வருகிறார் என்று தான் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால் அவர் தற்போதைக்கு நேரடி தமிழ் படம் எதுவும் ஒப்புக்கொள்ளவில்லை.

ஜான்வியின் அம்மா ஸ்ரீதேவி தமிழ்நாட்டில் பிறந்து லேடி சூப்பர்ஸ்டாராக இந்திய சினிமாவில் வலம்வந்தவர். அவர் இடத்தை ஜான்வி பிடிக்க முடியுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ஜான்வி கபூர் ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். அவர் பிறந்தநாள் அன்று வருடம்தோறும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

தனக்கு திருமணம் திருப்பதியில் தான் நடைபெறும் என்றும் அவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். மேலும் காஞ்சிபுரம் தங்க ஜரி பட்டுப்புடவை அணிந்து கொண்டு தான் திருமணம் செய்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

பாலிவுட் நடிகைகள் பலரும் தங்கள் திருமணத்தை பல கோடி செலவு செய்து பிரம்மாண்டமாக நடத்தும் சூழலில், ஜான்வி கபூர் ஆன்மீக தலத்தில் திருமணம் நடத்த முடிவெடுத்து இருப்பதற்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...