சினிமாசெய்திகள்

என் திருமணம் அந்த இடத்தில் தான்.. தமிழ் பெண் என நிரூபிக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

Share

என் திருமணம் அந்த இடத்தில் தான்.. தமிழ் பெண் என நிரூபிக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தற்போது ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கிறார். அவர் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கே பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

ஜான்வி கபூர் தற்போது தெலுங்கிலும் அறிமுகம் ஆகி இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அடுத்து அவர் தமிழுக்கு எப்போது வருகிறார் என்று தான் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால் அவர் தற்போதைக்கு நேரடி தமிழ் படம் எதுவும் ஒப்புக்கொள்ளவில்லை.

ஜான்வியின் அம்மா ஸ்ரீதேவி தமிழ்நாட்டில் பிறந்து லேடி சூப்பர்ஸ்டாராக இந்திய சினிமாவில் வலம்வந்தவர். அவர் இடத்தை ஜான்வி பிடிக்க முடியுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ஜான்வி கபூர் ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். அவர் பிறந்தநாள் அன்று வருடம்தோறும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

தனக்கு திருமணம் திருப்பதியில் தான் நடைபெறும் என்றும் அவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். மேலும் காஞ்சிபுரம் தங்க ஜரி பட்டுப்புடவை அணிந்து கொண்டு தான் திருமணம் செய்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

பாலிவுட் நடிகைகள் பலரும் தங்கள் திருமணத்தை பல கோடி செலவு செய்து பிரம்மாண்டமாக நடத்தும் சூழலில், ஜான்வி கபூர் ஆன்மீக தலத்தில் திருமணம் நடத்த முடிவெடுத்து இருப்பதற்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Share
தொடர்புடையது
5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட...

4 1
இலங்கைசெய்திகள்

செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்...

1
உலகம்செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : கனடாவில் இருந்து வந்த கோரிக்கை

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும், பொறுப்புக்கூறல்...

3 1
உலகம்செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய...