சினிமாசெய்திகள்

என் திருமணம் அந்த இடத்தில் தான்.. தமிழ் பெண் என நிரூபிக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

Share

என் திருமணம் அந்த இடத்தில் தான்.. தமிழ் பெண் என நிரூபிக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தற்போது ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கிறார். அவர் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கே பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

ஜான்வி கபூர் தற்போது தெலுங்கிலும் அறிமுகம் ஆகி இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அடுத்து அவர் தமிழுக்கு எப்போது வருகிறார் என்று தான் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால் அவர் தற்போதைக்கு நேரடி தமிழ் படம் எதுவும் ஒப்புக்கொள்ளவில்லை.

ஜான்வியின் அம்மா ஸ்ரீதேவி தமிழ்நாட்டில் பிறந்து லேடி சூப்பர்ஸ்டாராக இந்திய சினிமாவில் வலம்வந்தவர். அவர் இடத்தை ஜான்வி பிடிக்க முடியுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ஜான்வி கபூர் ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். அவர் பிறந்தநாள் அன்று வருடம்தோறும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

தனக்கு திருமணம் திருப்பதியில் தான் நடைபெறும் என்றும் அவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். மேலும் காஞ்சிபுரம் தங்க ஜரி பட்டுப்புடவை அணிந்து கொண்டு தான் திருமணம் செய்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

பாலிவுட் நடிகைகள் பலரும் தங்கள் திருமணத்தை பல கோடி செலவு செய்து பிரம்மாண்டமாக நடத்தும் சூழலில், ஜான்வி கபூர் ஆன்மீக தலத்தில் திருமணம் நடத்த முடிவெடுத்து இருப்பதற்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...