அடித்து நொறுக்கிய ஜெயிலர்.. மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டுமே இத்தனை கோடியா?
இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான இப்படம் முதல் நாளில் இருந்து சிறப்பான விமர்சனத்தை பெற்று வருகிறது.
ஜெயிலர் படம் முதல் நாள் தமிழகத்தில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது என்பது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இதுவரை தமிழகத்தில் மட்டுமே எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜெயிலர் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் முடிவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டுமே ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துள்ளது.
Leave a comment