3 14 scaled
சினிமாசெய்திகள்

விஜய் அரசியலில் ஜெயிப்பது கஷ்டம்: மீசை ராஜேந்திரன் பேட்டி

Share

விஜய் அரசியலில் ஜெயிப்பது கஷ்டம்: மீசை ராஜேந்திரன் பேட்டி

தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத பிரபலங்களில் ஒருவராக மாறிய தளபதி விஜய் சமீபத்தில் அரசியலில் குதித்தது அனைவருக்கும் தெரிந்ததே.

தளபதி விஜய் தற்போது ’கோட்’ படத்தில் நடித்து வருகின்றார். அவர் இன்னும் இரண்டு படங்களோடு நான் சினிமாவில் இருந்து விலக போகிறேன் என்றும் .அதன் பின் முழுநேர அரசியலில் ஈடுபடப்போகிறேன் என்றும் அறிவித்திருந்தார். அது மட்டுமின்றி அவர் ஆரம்பித்த கட்சியின் பெயரையும் அறிவித்திருந்தார்.

சமீபத்தில் அவர் ஆரம்பித்த “தமிழக வெற்றி கழகம் ” என்ற கட்சியில் உறுப்பினராக சேருவதற்கான செயலியை விஜய் அறிமுகபடுத்திய உடன் ஒரே நேரத்தில் அதிகமானோர் அந்த செயலியை பயன்படுத்தியமையால் செயலி முற்றிலுமாக முடங்கியது. பின்பு இறுதியாக 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர் என்பதும் தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் யூடியூப் தளம் ஒன்றில் பேட்டி கொடுத்த மீசை ராஜேந்திரன் விஜய் அரசியலில் வெல்வது கடினம் என்றும் ,அவருக்கு இன்னும் வயசும் , அனுபவமும் தேவை என்றும் ,அவர் இளசுகளையும் , முதன்முறையாக வாக்களிக்க போகும் மாணவர்களையும் குறிவைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இது விஜய் ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது “இவர் லியோ திரைப்படம் வெற்றி அடைந்தால் நான் என் மீசையை எடுப்பேன் என்று பேட்டி ஒன்றில் சவால் விட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
world
செய்திகள்இந்தியா

சீமான் பின்னடைவு: தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பிரபு முன்னிலை!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி...

Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...