images 18
சினிமாசெய்திகள்

நண்பன் படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா?

Share

நண்பன் படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா?

நடிகர் விஜய், அவரது நடிப்பில் அடுத்து தமிழ் சினிமாவில் கோட் படம் வெளியாக இருக்கிறது. The Greatest Of All Time என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்திற்கான படப்பிடிப்பு தமிழ்நாடு, கேரளா, ரஷ்யா என மாறி மாறி நடந்தது. அண்மையில் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கோட் படத்தில் இடம்பெறும் சின்ன சின்ன என 2வது பாடல் வெளியாகி இருந்தது.

இதில் விஜய்-சினேகா இடம்பெற்றிருந்தார்கள், பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

விஜய் காதல், ஆக்ஷன், மாஸ் என எந்த ஜானரில் நடித்தாலும் கில்லி போல கலக்கிவிடுவார்.

அப்படி அவர் புகுந்து விளையாடும் ஒரு ஜானர் என்றால் அது காமெடி தான். அப்படி காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் உருவான படம் தான் நண்பன்.

சேத்தன் பகத் எழுதிய Five Point Someone என்ற நாவலை தழுவி ஹிந்தி 3 இடியட்ஸ் படம் வந்தது. அதனை தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த். சத்யராஜ், இலியானா என பலர் நடித்திருந்தார்கள்.

ஆனால் இந்த படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வானது சூர்யா தானாம். இந்த தகவலை சேத்தன் பகத் தனது டுவிட்டரில், இன்று மும்பையில் ஜிம்மில் தமிழ் சூப்பர் ஸ்டார் சூர்யாவை சந்தித்தேன்.அவர் 3 இடியட்ஸ் தமிழில் நடிக்கிறார் என பதிவிட்டிருக்கிறார். 2010ம் ஆண்டு அவர் பதிவிட்ட டுவிட் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....