tamilni Recovered Recovered 8 scaled
சினிமாசெய்திகள்

இந்தியாவின் மிகப்பெரிய நடிகரா சூரி? பெர்லின் திரைப்பட விழாவில் ஆச்சரியம் அடைந்த பார்வையாளர்கள்..!

Share

இந்தியாவின் மிகப்பெரிய நடிகரா சூரி? பெர்லின் திரைப்பட விழாவில் ஆச்சரியம் அடைந்த பார்வையாளர்கள்..!

சூரி நடித்த ‘ஏழுகடல் ஏழு மலை’ மற்றும் ’கொட்டுக்காளி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதை அடுத்து இந்த படங்களை பார்த்த பார்வையாளர்கள் இந்தியாவில் சூரி ஒரு மிகப்பெரிய நடிகரா? என்ற கேள்வியை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூரி கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த நிலையில் ’வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் தான் அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் இணைந்து காமெடியனாக சுமார் 150 படங்களுக்கு மேல் நடித்து வந்த நிலையில் தற்போது தான் அவர் ஒரு சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

குறிப்பாக சூரி நடிப்பில் வெளியான ’விடுதலை’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் ‘கருடன்’ ’ஏழு கடல் ஏழு மலை’ மற்றும் ’கொட்டுக்காளி’ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ராம் இயக்கத்தில் உருவான ’ஏழு கடல் ஏழு மலை’ என்ற படம் சமீபத்தில் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போது சூரி கேரக்டருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதனை அடுத்து அடுத்த நாளே சூரி நடித்த ’கொட்டுக்காளி’ திரைப்படமும் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதை அடுத்து இந்தியாவிலிருந்து வந்த ஒரு நடிகரின் இரண்டு படங்கள் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருக்கிறது என்றால் இந்தியாவில் அவர் மிகப்பெரிய நடிகராக இருக்கும் என்று பலர் பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் அவர்கள் சூரி குறித்து விசாரித்த போது தான் 150 படங்களுக்கு மேல் அவர் காமெடி நடிகராக நடித்திருந்ததாகவும் தற்போது தான் ஹீரோவாக நடித்து வருவதாகவும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த ஒரு சில ஆண்டுகளிலேயே அவர் சர்வதேச அளவில் புகழ்பெறும் அளவுக்கு தரமான படங்களில் நடித்து வருவதையும் தெரிந்து கொண்டனர். இதனால் சூரி புகழ் இரண்டே படங்களால் உலகம் முழுவதும் பரவி இருப்பதை அடுத்து அவரது தரப்பினர் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இனிமேல் தரமான கதையை தேர்வு செய்து ஹீரோவாக மட்டுமே சூரி நடிப்பார் என்றும் தனது முழு திறமையை வெளிப்படுத்தி விருதுகளை பெறுவதே அவரது லட்சியம் என்றும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...