24 664196deaa12f
சினிமாசெய்திகள்

ரஜினியின் புகழை பார்த்து கோபப்பட்ட இளையராஜா.. இப்படியெல்லாம் நடந்ததா

Share

ரஜினியின் புகழை பார்த்து கோபப்பட்ட இளையராஜா.. இப்படியெல்லாம் நடந்ததா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்துள்ளார்.

இப்படத்திற்கு கூலி என தலைப்பு வைத்துள்ளனர். சமீபத்தில் தான் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த டைட்டில் டீசரில் தனது அனுமதியின்று தன்னுடைய பாடலை பயன்படுத்தியதாக கூறி, காப்புரிமை நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இளையராஜா.

ரஜினியின் நெருக்கமான நபர்களில் ஒருவரான இளையராஜாவே இப்படி செய்திருக்கிறாரே என பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில், ரஜினிக்கும் – இளையராஜாவிற்கும் இடையே நடந்த சம்பவம் குறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் அந்தணன் பேசியுள்ளார்.

இதில் ஒரு முறை இளையராஜாவும் ரஜினியும் இணைந்து திருவனாமலைக்கு சென்றார்களாம். அங்கு சென்று காரில் இருந்து இறங்கியவுடன் அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் பெரும் கூட்டமாக திரண்டு ‘தலைவா’ என கத்திக்கொண்டு ரஜினியிடம் சென்றுவிட்டார்களாம்.

கோபமடைந்துவிட்டாராம். இதன்பின் நீ கார்ல ஏறி கிளம்பு என ரஜினியிடம் கூறினாராம் இளையராஜா. அதன்படி ரஜினியும் அங்கிருந்து கிளம்பிவிட்டாராம். இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...