6 17
சினிமாசெய்திகள்

கைவிடப்படுகிறதா தனுஷ் நடிப்பில் உருவாக இருந்த இளையராஜாவின் பயோபிக்?.. காரணம் இதுதானா

Share

கைவிடப்படுகிறதா தனுஷ் நடிப்பில் உருவாக இருந்த இளையராஜாவின் பயோபிக்?.. காரணம் இதுதானா

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து ஒரு திரைப்படம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.

சமீபத்தில் தான் இப்படத்தின் துவக்க விழா நடந்தது. இந்த விழாவில் பாரதிராஜா, கமல் காச, வெற்றிமாறன் ஆகியோர் கலந்துகொண்டனர். இப்படத்திற்கு உலகநாயகன் கமல்ஹாசன் தான் திரைக்கதை எழுதப்போகிறார் என கூறப்பட்டது.

ஆனால் படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பொறுப்பில் இருந்து சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசன் விலகினார். இருப்பினும், தனுஷ் குபேரா படத்தில் நடித்து முடித்து விட்டு இளையராஜா படத்தில் நடிப்பார் என எதிர்பாக்கப்பட்டது.

ஆனால், அதன் பின் இப்படம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில், தற்போது இளையராஜாவின் படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, படத்தின் பட்ஜெட் அதிகரித்ததாலும், சில கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் இப்படம் கைவிடப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...