Krithi Shetty photoshoot
சினிமாசெய்திகள்

க்ரித்தி ஷெட்டிக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன்!

Share

க்ரித்தி ஷெட்டிக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன்!

க்ரித்தி ஷெட்டியுடன் ஜோடியாக நடிக்கபோவதில்லை என நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். அதற்கான பின்னணி காரணத்தையும் அவர் விரிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் தவிர தென்னிந்திய படங்களிலும், பாலிவுட்டிலும் நடித்து வரும் விஜய் சேதுபதி அனைத்து மொழிகளிலும் தனக்கென தனியாக ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.

இவர் தெலுங்கில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து ஹிட்டடித்த படம் உப்பென்னா.

இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த க்ரித்தி ஷெட்டிக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார். அதற்கான காரணத்தையும் அவர் அப்போது விளக்கினார்.

விஜய் சேதுபதி கூறியதாவது
“நான் உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் க்ரித்தி ஷெட்டியின் தந்தையாக நடித்தேன். எனவே இவருடன் நான் எப்படி ரொமாண்டிக்காக நடிக்க முடியும் என கூறி வேண்டாம் என கூறினேன்.

உப்பென்னா படத்தில் நடித்தபோது நானும் அவரும் தோன்றும் க்ளைமாக்ஸ் காட்சியில் நடிப்பதில் க்ரித்தி ஷெட்டி சிரமம் அடைந்ததை பார்த்தேன்.

பின் அவரை அழைத்து உங்கள் வயதில் எனக்கு மகன் இருக்கிறார். நீங்களும் எனக்கு மகள் போன்றுதான் என்று கூறினேன்.அதன் பின்னர் அவர் எந்த பயமும் இல்லாமல் சிறப்பாக நடித்தார்.

க்ரித்தி ஷெட்டியை மகள் போன்றுதான் நினைக்கிறேன். எனவே அவரை எனக்கு ஹீரோயினாக நினைத்து கூட பார்க்க முடியாது” என்று கூறினார்.

Share
தொடர்புடையது
hindutamil prod 2025 11 23 2thuvwy1 3 4 1
பொழுதுபோக்குசினிமா

மத ரீதியான பாகுபாட்டால் வாய்ப்புகள் பறிபோகின்றன: ஏ.ஆர். ரஹ்மானின் கருத்தால் இந்தியாவில் பெரும் சர்ச்சை!

உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாலிவுட் திரையுலகில் நிலவும் மறைமுகமான “மத ரீதியான பாகுபாடு”...

MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...