Krithi Shetty photoshoot
சினிமாசெய்திகள்

க்ரித்தி ஷெட்டிக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன்!

Share

க்ரித்தி ஷெட்டிக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன்!

க்ரித்தி ஷெட்டியுடன் ஜோடியாக நடிக்கபோவதில்லை என நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். அதற்கான பின்னணி காரணத்தையும் அவர் விரிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் தவிர தென்னிந்திய படங்களிலும், பாலிவுட்டிலும் நடித்து வரும் விஜய் சேதுபதி அனைத்து மொழிகளிலும் தனக்கென தனியாக ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.

இவர் தெலுங்கில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து ஹிட்டடித்த படம் உப்பென்னா.

இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த க்ரித்தி ஷெட்டிக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார். அதற்கான காரணத்தையும் அவர் அப்போது விளக்கினார்.

விஜய் சேதுபதி கூறியதாவது
“நான் உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் க்ரித்தி ஷெட்டியின் தந்தையாக நடித்தேன். எனவே இவருடன் நான் எப்படி ரொமாண்டிக்காக நடிக்க முடியும் என கூறி வேண்டாம் என கூறினேன்.

உப்பென்னா படத்தில் நடித்தபோது நானும் அவரும் தோன்றும் க்ளைமாக்ஸ் காட்சியில் நடிப்பதில் க்ரித்தி ஷெட்டி சிரமம் அடைந்ததை பார்த்தேன்.

பின் அவரை அழைத்து உங்கள் வயதில் எனக்கு மகன் இருக்கிறார். நீங்களும் எனக்கு மகள் போன்றுதான் என்று கூறினேன்.அதன் பின்னர் அவர் எந்த பயமும் இல்லாமல் சிறப்பாக நடித்தார்.

க்ரித்தி ஷெட்டியை மகள் போன்றுதான் நினைக்கிறேன். எனவே அவரை எனக்கு ஹீரோயினாக நினைத்து கூட பார்க்க முடியாது” என்று கூறினார்.

Share

Recent Posts

தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...