இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ். ராஜமௌலி, கடவுள் நம்பிக்கை குறித்து வெளிப்படையாகப் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் ‘மகதீரா’, ‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற பல வெற்றிப் படங்களை வழங்கியவர்.
மகேஷ் பாபு, பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிக்கும் ‘வாரணாசி’ படத்தின் டைட்டில் அறிவிப்பு விழாவில் பேசிய இயக்குநர் ராஜமௌலி, தனது தனிப்பட்ட நம்பிக்கைகளைப் பகிர்ந்துகொண்டார்:
அவர் கூறியதாவது: “எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. அனுமன் தான் என்னை வழிநடத்துகிறார் எனத் தந்தை கூறுவார். என் மனைவியும் அனுமன் பக்தை. அனுமனை அவரது நண்பர் போல் நினைத்து அவருடன் பேசிக் கொண்டிருப்பார். அவர்களை நினைத்தால் எனக்குக் கோபமாக வரும்” எனப் பேசியுள்ளார்.
இந்தியாவில் மத நம்பிக்கைகள் வலுவாக உள்ள சூழலில், ராஜமௌலி போன்ற ஒரு பிரபல இயக்குநர் கடவுள் நம்பிக்கை இல்லை என வெளிப்படையாகக் கூறியது, சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

