50 லட்சம் சம்பளம்... குவியும் பாராட்டு
சினிமாசெய்திகள்

50 லட்சம் சம்பளம்… குவியும் பாராட்டு

Share

50 லட்சம் சம்பளம்… குவியும் பாராட்டு

இந்தியாவின் புனே நகரத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் ஆண்டுக்கு 50 லட்சம் சம்பளத்தில் கூகிள் நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.

பிளாக்செயின் தொழில்நுட்பத்தில்
அந்த மாணவன், இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT உள்ளிட்டவையை சார்ந்தவன் அல்ல என்பது தான் இதன் சிறப்பு.

MIT-World Peace பல்கலைக்கழக மாணவனான ஹர்ஷல் ஜூய்கார் (Harshal Juikar) பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

சிறப்பான நிறுவனங்களில் பணிபுரிய ஆசைப்படும் மாணவர்களுக்காக சில குறிப்புகளையும் ஹர்ஷல் ஜூய்கர் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், ஆர்வமாக இருங்கள், விடாமுயற்சியுடன் இருங்கள் மற்றும் அறியப்படாதவற்றை ஆராய பயப்பட வேண்டாம்.

மேலும், நமது உணர்வுகளைப் பின்தொடர்வதில் தான் நாம் உண்மையிலேயே நமது நோக்கத்தைக் காண்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு துவக்கத்தில், Avni Malhotra என்ற IIM மாணவர் ஒருவர் ஆண்டுக்கு ரூ.64.61 லட்சம் சம்பளத்திற்கு மைக்ரோசாப்ட் சிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்டார்.

ஜெய்ப்பூரை சேர்ந்த அவ்னி மல்ஹோத்ரா, ஆறு சுற்று நேர்காணல்களுக்குப் பிறகு தமது கனவு வேலையை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....