6 18
சினிமாசெய்திகள்

குட் பேட் அக்லீ படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த ஜீ.வி.பிரகாஷ் .. வைரலாகும் பதிவு

Share

குட் பேட் அக்லீ படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த ஜீ.வி.பிரகாஷ் .. வைரலாகும் பதிவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது, இவர் விடாமுயற்சி படத்தை முடித்து விட்டு குட் பேட் அக்லீ படத்தில் நடித்து கொண்டு வருகிறார்.

அஜித்தின் குட் பேட் அக்லீ படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் ஏற்கனவே கூறி இருக்கும் நிலையில், இன்னும் 7 நாள் ஷூட்டிங் எடுக்கப்படவேண்டி இருக்கிறது எனவும் கூறப்பட்டது.

மேலும் இசையமைப்பார் தேவி ஸ்ரீ பிரசாத் படத்தில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தற்போது ஜீ.வி.பிரகாஷ் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

ஜீ.வி.பிரகாஷ், அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தில் இசையமைக்க இருப்பதால் ரசிகர்களுக்கு படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஜீ.வி.பிரகாஷ் ரசிகர் ஒருவர் குட் பேட் அக்லீ குறித்து கேட்ட கேள்விக்கு அதிரடி பதில் கூறி படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.

அதில், ரசிகர் ஒருவர் குட் பேட் அக்லீ படத்தின் பணிகள் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்று கேள்வி கேட்க.

அதற்கு ஜீ.வி.பிரகாஷ்,” ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் செலிப்ரேஷன் ஆப் லைப் இசைக்கு ஒரு நடனக் காட்சியைப் படமாக்கினால் எப்படி இருக்கும்?..நன்றாக இருக்கும் அல்லவா’ என்று பதிலளித்துள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...