R 4
சினிமாசெய்திகள்

ஜேர்மனி இணைய பேச்சுவார்த்தைகள் நடத்திய முக்கிய அரசியல்வாதி மரணம்

Share

கிழக்கு மேற்கு என பிரிந்திருந்த ஜேர்மனி ஒன்றாக இணைய பேச்சுவார்த்தைகள் நடத்தியவரும், நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த ஐரோப்பாவை மீட்க கடும் முயற்சிகள் மேற்கொண்டவருமான பிரபல அரசியல்வாதி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

ஏஞ்சலா மெர்க்கலின் அமைச்சரவையில் 2009ஆம் ஆண்டு நிதி அமைச்சராக பொறுப்பேற்றவர் Wolfgang Schaeuble. சரியாக அந்த நேரத்தில் ஐரோப்பா ஒரு பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள, அவரது கடும் முயற்சி நிதி நெருகடியிலிருந்து விடுபட ஐரோப்பாவுக்கே பெரும் உதவியாக இருந்தது.

இந்த Schaeuble, கிழக்கு மேற்கு என பிரிந்திருந்த ஜேர்மனி ஒன்றாக இணைய முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்தியவர் ஆவார்.

ஆனால், ஜேர்மனி இணைந்ததும், மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் 1990ஆம் ஆண்டு Schaeubleயை துப்பாக்கியால் சுட, அவரது உடல் இடுப்புக்குக் கீழே செயலிழந்தது. அதற்குப் பிந்தைய தனது வாழ்நாள் முழுவதையும் அவர் சக்கர நாற்காலியில்தான் செலவிட்டார்.

ஜேர்மனியின் நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினரான Schaeuble, தனது 81ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை அவர் தனது வீட்டில் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எட்டு ஆண்டுகள் நிதி அமைச்சராக பணியாற்றிய Schaeuble, பின்னர் நாடாளுமன்ற சபாநாயகரானார்.

அவரது மறைவுக்கு ஜேர்மன் இந்நாள் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், முன்னாள் சேன்சலரான ஏஞ்சலா மெர்க்கல் முதல் உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...