R 4
சினிமாசெய்திகள்

ஜேர்மனி இணைய பேச்சுவார்த்தைகள் நடத்திய முக்கிய அரசியல்வாதி மரணம்

Share

கிழக்கு மேற்கு என பிரிந்திருந்த ஜேர்மனி ஒன்றாக இணைய பேச்சுவார்த்தைகள் நடத்தியவரும், நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த ஐரோப்பாவை மீட்க கடும் முயற்சிகள் மேற்கொண்டவருமான பிரபல அரசியல்வாதி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

ஏஞ்சலா மெர்க்கலின் அமைச்சரவையில் 2009ஆம் ஆண்டு நிதி அமைச்சராக பொறுப்பேற்றவர் Wolfgang Schaeuble. சரியாக அந்த நேரத்தில் ஐரோப்பா ஒரு பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள, அவரது கடும் முயற்சி நிதி நெருகடியிலிருந்து விடுபட ஐரோப்பாவுக்கே பெரும் உதவியாக இருந்தது.

இந்த Schaeuble, கிழக்கு மேற்கு என பிரிந்திருந்த ஜேர்மனி ஒன்றாக இணைய முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்தியவர் ஆவார்.

ஆனால், ஜேர்மனி இணைந்ததும், மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் 1990ஆம் ஆண்டு Schaeubleயை துப்பாக்கியால் சுட, அவரது உடல் இடுப்புக்குக் கீழே செயலிழந்தது. அதற்குப் பிந்தைய தனது வாழ்நாள் முழுவதையும் அவர் சக்கர நாற்காலியில்தான் செலவிட்டார்.

ஜேர்மனியின் நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினரான Schaeuble, தனது 81ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை அவர் தனது வீட்டில் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எட்டு ஆண்டுகள் நிதி அமைச்சராக பணியாற்றிய Schaeuble, பின்னர் நாடாளுமன்ற சபாநாயகரானார்.

அவரது மறைவுக்கு ஜேர்மன் இந்நாள் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், முன்னாள் சேன்சலரான ஏஞ்சலா மெர்க்கல் முதல் உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...