டிமான்ட்டி காலனி 3 ஆரம்பம்: மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

articles2FqpILCUr6EEqQv1X62MFX

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திகில் திரைப்படமான ‘டிமான்ட்டி காலனி’ (Demonte Colony) படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதல் இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது பாகத்தையும் இயக்குனர் அஜய் ஞானமுத்துவே இயக்குகிறார். இதிலும் நாயகனாக அருள்நிதியே நடிக்கிறார்.

ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பிற்கு மத்தியில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முந்தைய பாகங்களை விடவும் கூடுதல் மர்மங்கள் மற்றும் திகில் நிறைந்த காட்சிகளுடன் இந்த மூன்றாம் பாகம் உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான ஹாரர் பிரான்சைஸ் (Horror Franchise) வரிசையில் இடம்பிடித்துள்ள டிமான்ட்டி காலனி படத்தின் இந்த புதிய நகர்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

 

 

Exit mobile version