22 631af9627007b scaled
சினிமாசெய்திகள்

நடிகர் முரளியின் மகன்களை பற்றி தெரியும், அவரது மகள் என்ன செய்கிறார் தெரியுமா?

Share

நடிகர் முரளியின் மகன்களை பற்றி தெரியும், அவரது மகள் என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகர் முரளி, தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய முக்கிய நடிகர்களில் ஒருவர்.

கே.பாலசந்தர் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த அமீர்ஜான் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் பூவிலங்கு. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனவர் தான் முரளி.

இவர் கன்னட திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான சித்தலிங்கையாவின் மகன் ஆவார்.

அப்படத்தை தொடர்ந்து நடிகர் முரளி பகல் நிலவு, வண்ணக் கனவுகள், புதுவசந்தம், இதயம், ஒரு தலைராகம், சுந்தரா டிராவல்ஸ், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், வெற்றிக்கொடிகட்டு உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

முரளிக்கு 3 பிள்ளைகள், காவ்யா, அதர்வா மற்றும் ஆகாஷ். இதில் அதர்வா சினிமாவில் நடிகராக கலக்கி வந்தார், 3வது மகன் ஆகாஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சினேகா பிரிட்டோ என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

முரளியின் மூத்த மகள் காவ்யா டாக்டராக பணியாற்றி வருகிறார். சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை நிபுணராக இருந்து வருகிறார். அவருக்கு 2011ம் ஆண்டில் திருமணமானது.

Share
தொடர்புடையது
13 4
செய்திகள்இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது....

wo
செய்திகள்உலகம்

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள்: போர்க்களத்தில் பலவீனமான புள்ளிகளாக மாறினவா?

ஈரான் தனது ஏவுகணைப் படைகளைப் பாதுகாப்பதற்காகப் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் அமைத்திருந்த பிரம்மாண்டமான ‘ஏவுகணை...

12 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு, தேடுதல் பணிகள் தீவிரம்!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் இன்று (06.03.2026) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து...

14 5
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: மார்ச் 28 முதல் அமுல்!

இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது....