சினிமாசெய்திகள்

முகேஷ் அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

tamilni 349 scaled
Share

முகேஷ் அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி உலகின் மிகப்பாரிய பணக்காரர்களில் ஒருவர் என்பது தெரிந்ததே.

சமீபத்தில் மிகவும் ஆடம்பரமாக நடந்த அவரது மகன் ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்ட நிகழ்ச்சியிலிருந்து அவர் செய்திகளில் இருக்கிறார்.

ஆனால் அவரது வீட்டில் வேலை செய்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் தெரியுமா?

முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீதா அம்பானியும், இந்தியாவில் விலை உயர்ந்த வீடு வைத்திருப்பது உண்மைதான். அவருடைய வீடு எந்த அரண்மனைக்கும் குறைந்ததல்ல.

அம்பானியின் வீட்டின் பெயர் ஆன்டிலியா (Antilia). மும்பையில் இருக்கும் இந்த வீட்டின் மதிப்பு சுமார் 15,000 கோடி என கூறப்படுகிறது.

நீதா அம்பானியின் விருப்பத்திற்கு இணங்க, அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அண்டிலிஸ் தீவின் நினைவாக இந்த வீட்டிற்கு Antilia என பெயர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மும்பை அல்டாமவுண்ட் சாலையில் உள்ள ஆன்டிலியாவில், 27 மாடிகள் கொண்ட சொகுசு வீட்டில், முகேஷ் அம்பானி தனது தாயார் கோகிலா பென், மனைவி நீதா, இரண்டு மகன்கள் ஆகாஷ்-ஆனந்த், மருமகள் ஷ்லோகா மற்றும் பேரன் பிருத்வி அம்பானி ஆகியோருடன் வசித்து வருகிறார்.

அம்பானி ஆண்டிலியாவை நிர்வகிக்க சுமார் 600 பணியாளர்களை நியமித்துள்ளார். இங்கு பெரும்பாலானோர் 24×7 மணி நேரமும் வேலை செய்கிறார்கள். அம்பானி குடும்பத்தினரும் ஊழியர்களை தங்கள் குடும்ப உறுப்பினர்களாகவே கருதுகின்றனர்.

தோட்டக்காரர்கள், எலக்ட்ரீஷியன்கள், பாதுகாவலர்கள், பிளம்பர்கள், ஓட்டுநர்கள், வேலையாட்கள், சமையல்காரர்கள் என மொத்தம் 600 பேர் முழுமையாக பராமரிப்பு செய்கிறார்கள். பலர் அந்த வீட்டிலேயே இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டிலியாவின் 6வது மாடியில் ஒரு கேரேஜ் உள்ளது, இதில் ஒரே நேரத்தில் 168 கார்களை நிறுத்த முடியும். இந்த கார்களை சர்வீஸ் செய்ய 7வது மாடியில் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அம்பானி வீட்டில் உள்ள ஊழியர்கள் நாட்டிலேயே சிறந்த மற்றும் மிகவும் பயிற்சி பெற்ற ஊழியர்களாக உள்ளனர், மேலும் அவர்களும் படித்தவர்கள்.

தகவல்களின்படி, அம்பானி குடும்பம் ஒவ்வொரு வீட்டுப் பணியாளருக்கும் அவரவர் திறமைக்கேற்ப ஊதியம் வழங்குகிறது. இங்கு பல ஊழியர்களின் சம்பளம் மாதம் ரூ.2 லட்சம் என்பது தெரிய வந்துள்ளது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...