1 1 28
சினிமாசெய்திகள்

இந்தியன் 3 OTTல் ரிலீஸா? அல்லது திரையரங்கில் ரிலீஸா? இயக்குனர் ஷங்கர் அதிரடி பதில்

Share

இந்தியன் 3 OTTல் ரிலீஸா? அல்லது திரையரங்கில் ரிலீஸா? இயக்குனர் ஷங்கர் அதிரடி பதில்

2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று இந்தியன் 2. 1996ல் வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட்டான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தனர்.

கமல் ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவான இப்படத்தில் சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, விவேக், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

கடந்த ஜூலை மாதம் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை. மேலும் பலராலும் ட்ரோல் செய்யப்பட்டது. இதனால் இந்தியன் 3 நேரடியாக OTTல் வெளியாகிறது என பேச துவங்கிவிட்டனர்.

இந்த நிலையில், இயக்குனர் ஷங்கர் இதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதில் “இந்தியன் 2 படத்திற்கு நெகட்டிவான விமர்சனம் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அது பரவாயில்லை. கேம் ஜேஞ்சர் படத்துடன் சேர்த்து, இந்தியன் 3 படத்தை சிறப்பாக உங்களுக்கு கொடுப்பேன்.” என ஷங்கர் கூறியுள்ளார்.

மேலும், இந்தியன் 3 திரைப்படம் திரையரங்கில் தான் வெளிவரும் என்றும் ஷங்கர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் OTT ரிலீஸ் குறித்து வெளிவந்த வந்ததிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...