2 15 scaled
சினிமாசெய்திகள்

அட்லீ அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

Share

அட்லீ அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இன்று இந்தியளவில் முக்கிய இயக்குனராக மாறியுள்ளார் இயக்குனர் அட்லீ.

தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து விஜய்யுடன் மூன்று வெற்றி படங்களுக்கு பின் ஷாருக்கான் உடன் ஜவான் திரைப்படத்தில் கைகோர்த்தார். இப்படம் உலகளவில் ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அடுத்ததாக சல்மான் கானுடன் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனராக மட்டுமின்றி அட்லீ தயாரிப்பாளராகவும் திரையுலகில் பயணித்து வருகிறார். இவருடைய தயாரிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் தான் பேபி ஜான். தமிழில் வெளிவந்த தெறி படத்தின் இந்தி ரீமேக் தான் இந்த பேபி ஜான்.

இப்படத்தில் வருண் தவான் ஹீரோவாக நடிக்க கீர்த்தி சுரேஷ், வாமிகா காபி உள்ளிட்ட கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் வருகிற டிசம்பர் 25ஆம் தேதி கிருத்துமஸ் பண்டிகை அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....