tamilni 61 scaled
சினிமா

ராயன் படத்தில் ரஜினியா! தனுஷ் சொன்ன தகவல், அதிர்ந்த அரங்கம்

Share

ராயன் படத்தில் ரஜினியா! தனுஷ் சொன்ன தகவல், அதிர்ந்த அரங்கம்

முன்னணி நடிகரான தனுஷ் தற்போது இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராயன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் இது தனுஷின் 50வது திரைப்படமாகும்.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து முதல் முறையாக நடிப்பு அரக்கன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார். இருவருக்கும் இடையிலான காட்சி கண்டிப்பாக திரையரங்க அதிர வைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடந்து முடிந்த நிலையில் நேற்று தெலுங்கில் ராயன் படத்திற்கான ப்ரீ ரிலீஸ் விழா நடைபெற்றுள்ளது. இதில் தனுஷிடம் நட்சத்திரங்கள் கேள்வி கேட்டு வந்தனர்.

அதில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் ‘இப்படத்தில் நீங்கள் நடிக்கவில்லை என்றால், வேறு யார் உங்களுடைய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்’ என தனுஷிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு தனுஷ், ‘சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்’ என கூறினார்.

தனது கதாபாத்திரத்தில் தனக்கு பதிலாக ரஜினிகாந்த் நடித்திருப்பார் என தனுஷ் கூறியவுடன் அந்த அரங்கமே அதிர்ந்துபோனது. அந்த வீடியோவையும் தற்போது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...