Cwc 5 பிரச்சனைக்கு பிறகு சூப்பர் ஊருக்கு சென்று மணிமேகலை சொன்ன விஷயம்… எங்கே சென்றார், விஷயம் என்ன?

24 66e658dd53f1d

Cwc 5 பிரச்சனைக்கு பிறகு சூப்பர் ஊருக்கு சென்று மணிமேகலை சொன்ன விஷயம்… எங்கே சென்றார், விஷயம் என்ன?

மக்களை சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சி குழுவினர் எதிர்ப்பார்க்காத அளவுக்கு முதல் சீசன் வெற்றிபெற அதே உற்சாகத்துடன் அடுத்தடுத்த சீசன்களை ஒளிபரப்பினார்கள். இந்த வருடம் 5வது சீசன் தொடங்கப்பட்டது, இந்த சீசனில் எல்லாமே புதியது தான்.

நிகழ்ச்சி விரைவில் முடிவடைய உள்ள நிலையில் சில பிரச்சனைகளால் மணிமேகலை வெளியேறிவிட்டார். தான் 5வது சீசன் தொகுத்து வழங்குவதில் இருந்து வெளியேறியது ஏன் என அவர் வீடியோ வெளியிட சமூக வலைதளமே பரபரப்பில் உள்ளது.

ஆனால் அவர் வீடியோ வெளியிட்டதோடு சரி அவர் வேலையை பார்க்க சென்றுவிட்டார்.

சமீபத்தில் மணிமேகலை மற்றும் அவரது கணவர் இருவரும் சிவகாசி சென்றுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட கலாட்டா வீடியோக்களை வெளியிட்ட மணிமேகலை, அதன் ஆரம்பத்தில் தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Exit mobile version