tamilni 522 scaled
சினிமாசெய்திகள்

கேட்காமலே அள்ளிகொடுப்பவர் கேப்டன்… வாழ்ந்தவரை நல்லவராக வாழ்ந்தவர்…

Share

புரட்சி தலைவர் , நடிகரும் கேப்டனுமான விஜயகாந்த். எம்ஜிஆர் மற்றும் கலைஞர் இவர்களின் மீதுள்ள பற்றின் காரணமாக அவர்களின் பெயர்களின் பாதிப் பெயரை எடுத்து புரட்சிக்கலைஞர் என வைத்துக் கொண்டார். ஏழைகளின் இளவரசன் என்று அழைக்கப்படும் இவரின் கையால் தர்மம் வேண்டாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தர்மம் செய்தவர் .

விஜயகாந்தைப் பற்றி நடிகர் வையாபுரி பல தகவல்களை கூறினார். வையாபுரி கல்யாணத்திற்க்கு வந்து தாலி எடுத்துக் கொடுத்தாராம் விஜயகாந்த். அதுமட்டுமில்லாமல் தேர்தலில் விஜயகாந்த் ஜெயித்ததும் அவரை பார்க்க வையாபுரி குடும்பத்தோடு சென்றாராம். அதற்கு விஜயகாந்த் ஜெயலலிதாவை சந்தித்து விட்டாயா? என்று கேட்டாராம். இல்லை முதலில் உங்களை சந்தித்த பிறகு போகலாம் என இருக்கிறேன் என்று சொல்ல அதற்கு விஜயகாந்த் இல்ல இல்ல முதலில் ஜெயலலிதாவை சந்தித்து விட்டு என்னை வந்துப் பார் என்று சொல்லி அனுப்பிவைத்தாராம்.

இப்படி வாழும் வரை மற்றவர்களுக்கு நல்லவனாகவே வாழ்ந்தார் விஜயகாந்த். மேலும் வையாபுரி கள்ளழகர் படத்தில் நடித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் மிகவும் பீக்கில் இருந்தவர் வையாபுரி. அந்தப் படத்தின் ஒரு பாடலை மூன்று நாள்கள் படமாக்கிக் கொண்டிருந்தார்களாம்.மறு நாள் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் சூட்டிங்கும் நடந்ததாம். அதிலும் வையாபுரி நடிக்க உடனே விஜயகாந்த் ‘இந்தப் படத்திற்கான சூட்டிங் முடிய லேட் ஆகும். ஆகவே நீ முதலில் அந்தப் படப்பிடிப்பை முடித்து விட்டு வா ’ என சொல்லி ஒரு காரில் அனுப்பி வைத்தாராம் என்று வையாபுரி கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...