tamilni 109 scaled
சினிமாசெய்திகள்

இதில் ரீமேக்கெல்லாம் கிடையாது.. முழுக்க முழுக்க புதிய ஐடியா..! வெங்கட் பிரபு சொன்ன சீக்ரெட்

Share

இதில் ரீமேக்கெல்லாம் கிடையாது.. முழுக்க முழுக்க புதிய ஐடியா..! வெங்கட் பிரபு சொன்ன சீக்ரெட்

விஜய் நடிக்கும் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் நிலையில், அதன் இயக்குநர் வெங்கட் பிரபு சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

பா. ரஞ்சித் தயாரிக்கும் ‘ஜே.பேபி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் விஜயின் கோட் படம் பற்றி பேசியுள்ளார் வெங்கட் பிரபு.

அதன்படி அவர் கூறுகையில், விஜய் நடிக்கும் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. முதல் சிங்கிள் மே மாதம் வெளியாகலாம். இப்படம் ரீமேக் எல்லாம் கிடையாது. புதிய ஐடியா.

இந்த மாதத்துடன் படத்தின் கிளைமாக்ஸ் முடிந்துவிடும். அடுத்த ஒரு வெளிநாட்டு ஷெட்யூல் மட்டும்தான் உள்ளது. அத்துடன் படம் முடிந்துவிடும். இதில் நிறைய பாடல்கள் உள்ளன. நன்றாக என்ஜாய் பண்ணலாம். நிறைய நடிகர்களும் நடித்துள்ளார்கள்.

ஒரு ரசிகனாக விஜய் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. நான் அவரிடமே சொல்லி இருக்கிறேன். படத்தில் நிறைய கிராபிக் வேலைகள் உள்ளன. தொழில்நுட்ப ரீதியாக நிறைய உழைப்பு தேவைப்படுகிறது. அதனால் இப்போது படம் வெளியிடுவது குறித்தோ மற்ற விவரங்கள் குறித்தோ சொல்ல முடியாது. பண்டிகை நாளில் படம் வெளியாகலாம் என மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...