17510267070
சினிமாசெய்திகள்

அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை குறித்த கேள்விக்கு…!வைரலாகும் KPY பாலா பதில்..!

Share

“கலக்க போவது யாரு” என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேரை பெற்று வருபவர் KPY பாலா. இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார் . இன்று நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை வெற்றிகரமாக முடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு சாய்ராம் சார்பாக சிறப்பு பாராட்டு விழா நடாத்தப்பட்டது. இந்த விழாவில் நடிகர் பாலா கலந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது .

“இந்த வெற்றியடைந்த மாணவர்கள் நம் எதிர்காலத்தின் நம்பிக்கை. அவர்களிடம் தான் நம் சமூகத்தின் மாற்றம் இருக்கிறது. அவர்கள் எடுத்துக்காட்டாக இருக்கின்றார்கள். இன்று அவர்களோடு இருக்க முடிந்தது என் வாழ்வில் ஒரு பெரும் மகிழ்ச்சி,” எனக் கூறினார். நிகழ்வின் முக்கியமான பகுதியாக, இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே காணப்படும் போதைப்பழக்கங்கள் குறித்து பத்திரிகையர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்துள்ளார்.

அதாவது “பசங்க எல்லாரும் இப்போ நம்மளவுக்கு இல்ல, நம்ம விடவே தெளிவா இருக்காங்க. எதை எடுத்துக்கணும், எதை எடுத்துக்க கூடாது என்பதில் அவங்களுக்கு அதிக ஞானம் இருக்கு. நம்ம தான் அவர்களிடம் நிறைய விஷயங்களை கற்றுக்கணும்” இன்றைய மாணவர்களின் அறிவாற்றலை, சமூக உணர்வை, மற்றும் அவர்களது விழிப்புணர்வை மிகச் சிறப்பாக எடுத்துக் கூறியிருந்தார் .

இன்று திரை உலகிலும், ‘போதை பொருள் வேண்டாம்’ என்று கூறும் சிலர், உண்மையில் அதில் தாங்களே சிக்கிக்கொள்ளும் நிலை உள்ளது. இந்தக் கட்டத்தில், மாணவர்கள் தான் உண்மையான முன்னோடிகள் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் பாலா கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

Share
தொடர்புடையது
wor
செய்திகள்இந்தியா

ஜார்க்கண்டில் ஏர் அம்புலன்ஸ் விமானம் விழுந்து விபத்து! – காட்டில் நொருங்கிய விண்கலம்; ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் அம்புலன்ஸ் (Air...

vijai
செய்திகள்இந்தியா

ஸ்டாலின் vs விஜய்: சட்டமன்றத் தேர்தல் ஒரு ‘நேரடிப் போர்’ என அதிரடி முழக்கம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்,...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...