11 1 scaled
சினிமாசெய்திகள்

வந்த முதல்நாளே அர்ச்சனாவை அசிங்கப்படுத்தி அழவைத்த மாயா!

Share

வந்த முதல்நாளே அர்ச்சனாவை அசிங்கப்படுத்தி அழவைத்த மாயா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிது. எனினும் அனன்யா ராவ், பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

மேலும், பிக்பாஸ் வரலாற்றில் இம்முறை மேலும் ஐந்து பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு வைல்டு கார்டு என்ட்ரியான ஐந்து பேரையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் உள்ள சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்கள் வந்ததும் தமது வன்மத்தை காட்டத் தொடங்கியுள்ளனர் சக போட்டியாளர்கள். அதிலும் மாயா, பூர்ணிமா செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை.

இவ்வாறான நிலையில், ‘பிக்பாஸ் வீட்டுக்குள்ள அர்ச்சனா வரும்பொழுது நாம யாரும் சரியா வெல்கம் பண்ணல’ என்று பூர்ணிமா சொல்ல, ‘அத எதிர்பார்க்காதீங்க’ என்று மாயா உடனே பதில் சொல்கிறார்.

இதை பார்த்த அர்ச்சனா ‘எதிரியாக இருந்தாலும் நம்ம வீட்டுக்கு வராங்கனா ஒரு 5 நிமிஷம் சிரிச்சு பேசிட்டு அதுக்கப்புறம் தான் சண்டைய பாக்கணும்’ என்று சொல்ல மாயா உட்பட அனைவரும் சிரிக்கின்றனர்.

அதற்கு, ‘உங்களோட கலாய்களுக்கு நாங்க எப்படி அமைதியா போகனு நினைக்கிறீங்க’ என்று அர்ச்சனா சொல்ல ‘உங்கள்ட டிஸ்ரெஸ்பெக்ட் புல்லா பேசியிருந்தால் சாரி’ என மாயா கிண்டலாக சொல்கிறார். இதையடுத்து மாயா அழ ஆரம்பிக்கிறார்.இது தான் இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோ. பொறுத்திருந்து அர்ச்சனாவின் ஆட்டத்தை பார்ப்போம்.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...