2 11 scaled
சினிமாசெய்திகள்

எனக்கு விஜயுடன் நடிகை ஆசை.. ஏனென்றால் எனது கணவர் விஜய்யின் சாயல் உடையவர்! விருமாண்டி நடிகை பகிர்

Share

எனக்கு விஜயுடன் நடிகை ஆசை.. ஏனென்றால் எனது கணவர் விஜய்யின் சாயல் உடையவர்! விருமாண்டி நடிகை பகிர்

தமிழ் சினிமாவில் பிரபு நடிப்பில் வெளியான மிடில் கிளாஸ் மாதவன் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் அபிராமி.

கேரளாவைச் சேர்ந்த இவர், முதலில் மலையாளத்தில் சின்ன சின்ன கதாப்பாத்திரத்திரங்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தோஸ்த், சமுத்திரம் சார்லி சாப்ளின், சமஸ்தானம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனார்.

இவரது சினிமா வாழ்வில் இவருக்கு சிறந்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது கமல்ஹாசனுடன் நடித்த விருமாண்டி திரைப்படம் தான். இத் திரைப்படத்தில் திமிரான கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இதை தொடர்ந்து சினிமாவை விட்டு விலகிய இவர், நீண்ட இடைவெளியின் பின்னர் மாறா என்னும் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் 13 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நடிகை அபிராமி, பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருவதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தற்போது தனக்கு நடிகர் விஜயுடன் நடிகை ஆசை எனக் கூறிய அபிராமி, அதற்கு காரணம் தனது கணவர் விஜயை போல இருப்பது தான் எனக் கூறியுள்ளார்.

இவ்வாறு தனது கணவர் விஜயை போல உள்ளார் என அபிராமி கூறியது, சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டலுக்கு உள்ளாகி உள்ளது.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...