விஜய் டிவியில் மிகவும் பிரபல்யமான நிகழ்ச்சிகளில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் சீசன் 10 சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் காயத்திரி டைட்டில் வின்னராகவும் நஷ்ரி ஃ பர்ஸ்ட் ரன்னராக வந்திருந்தனர். இவர்கள் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பல விடயங்களை பகிர்ந்துள்ளார்.
காயத்திரி நீங்க டைட்டில் வின்னரான அந்த நிமிடம் எப்படியிருந்தது என்ற கேள்விக்கு “மூன்றாவது இடத்திலயாவது வருவேன் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது முதலாவது இடம் வந்தது கனவா நியமா எனத் தோன்றியதாக கூறிய அவர் ரொம்ப மகிழ்ச்சியாகவும் இருந்தாக” கூறினார்.
மேலும் நசரின் உங்களுக்கு சூப்பர் சிங்கர் பல இடங்களில் ஹெல்ப் பண்ணி இருக்கு ஆனால் நீங்க சூப்பர் சிங்கர் வரும் போது யோசித்து இருக்கின்றீர்களா? இது எல்லாம் நடக்கும் என்று அதற்கு ‘நானும் நினைத்து கொண்டிருந்தேன் மூன்றாவது இடம் தான் கிடைக்கும் என்று ஃ பர்ஸ்ட் ரன்னரப்பகா வந்தது சந்தோசமாக இருந்தது எனக் கூறினார்.
மேலும் நசரின் உங்களுடைய ஸ்கூல்ல என்ன மாதிரி சப்போட் பண்ணுவாங்க என்ற கேள்விக்கு ‘என்னோட ஸ்கூல்ல எல்லா ரிச்சரும் நல்லா சப்போட் பண்ணுங்க’ எனக் கூறினார். காயத்திரி நீங்க டைட்டில் வின்னராக வரவேனும் என்று ஆசை பட்டனிங்களா என்ற கேள்விக்கு ‘ஆரம்பத்தில் இருந்தது. ஒருதடவை எனக்கு எதோ பிழை விட்டன் அதனால் ஷவர் கிடைக்கவில்லை
இரண்டு மணி நேரம் அழுது கொண்டிருக்கும் போது பாட்டி சொன்னாங்க இதற்கு எல்லாம் அழுவாங்களா என்று நான் உனக்காக மொட்டை போடப்போகின்றேன் என்று சொன்னாங்கஇ அதற்கு பிறகு யோசித்தேன் இதில் ஜெயிச்சிட்டோம் இனி நம்ம நல்ல பாடவேண்டும் , நல்ல கொமான்ட் வாங்க வேண்டும் என தோணிச்சு என்று கூறினார்.
நாசரின் நீங்க சொல்லுங்க அம்மாக்கு ஷாப் ஓபன் பண்ணி கொடுத்திங்க அது பற்றி சொல்லுங்க என்ற கேள்விக்கு ‘சந்தோஷம் தான் அக்கா எல்லோரும் சொல்லுறாங்க நான் பெரிய சிங்கர் வருவேன் என்று அதுமட்டுமல்லாமல் அம்மாக்கு நெக்ளஸ் அப்பாக்கும் மோதிரமும் வாங்கி கொடுக்க வேண்டும் எனக் கூறினார் .