1 9 scaled
சினிமாசெய்திகள்

மறைந்தும் பசி போக்கும் கேப்டன் விஜயகாந்த்.. அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தினமும் அன்னதானம்

Share

மறைந்தும் பசி போக்கும் கேப்டன் விஜயகாந்த்.. அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தினமும் அன்னதானம்

விஜயகாந்த் மறைந்து நாளையுடன் 30 நாட்கள் ஆகவுள்ள நிலையில் ஒரே நாளில் மட்டும் 50 ஆயிரம் பேர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத பல திரைப் பிரபலங்கள், தே.மு.தி.க தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் அவரது நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விஜயகாந்த் மறைந்து நாளையுடன் 30 நாட்கள் ஆகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் விஜயகாந்த் சமாதியில் 50,000 பேர் திரண்டு அஞ்சலி செலுத்தியுள்ளதாக தேமுதிக நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அஞ்சலி செலுத்த வருபவர்கள் பசியோடு செல்லக் கூடாது என்பதற்காக தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அதாவது மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வழங்கப்படுகிறது. இதனை பலரும் சாப்பிட்டு வருகின்றனர்.

விஜயகாந்தை யார் பார்க்க வந்தாலும் முதலில் சாப்பிட்டு விட்டீர்களா என்று தான் கேட்பார். அவரின் கொள்கை படியே அன்னதானம் வழங்கப்படுவதாக தே.மு.தி.க.வினர் கூறுகின்றனர்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...