1 9 scaled
சினிமாசெய்திகள்

மறைந்தும் பசி போக்கும் கேப்டன் விஜயகாந்த்.. அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தினமும் அன்னதானம்

Share

மறைந்தும் பசி போக்கும் கேப்டன் விஜயகாந்த்.. அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தினமும் அன்னதானம்

விஜயகாந்த் மறைந்து நாளையுடன் 30 நாட்கள் ஆகவுள்ள நிலையில் ஒரே நாளில் மட்டும் 50 ஆயிரம் பேர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத பல திரைப் பிரபலங்கள், தே.மு.தி.க தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் அவரது நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விஜயகாந்த் மறைந்து நாளையுடன் 30 நாட்கள் ஆகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் விஜயகாந்த் சமாதியில் 50,000 பேர் திரண்டு அஞ்சலி செலுத்தியுள்ளதாக தேமுதிக நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அஞ்சலி செலுத்த வருபவர்கள் பசியோடு செல்லக் கூடாது என்பதற்காக தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அதாவது மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வழங்கப்படுகிறது. இதனை பலரும் சாப்பிட்டு வருகின்றனர்.

விஜயகாந்தை யார் பார்க்க வந்தாலும் முதலில் சாப்பிட்டு விட்டீர்களா என்று தான் கேட்பார். அவரின் கொள்கை படியே அன்னதானம் வழங்கப்படுவதாக தே.மு.தி.க.வினர் கூறுகின்றனர்.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

Two New Cases Planned Against Rajamouli 696x418.jpg
சினிமாபொழுதுபோக்கு

எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை! – ‘பாகுபலி’ எஸ்.எஸ். ராஜமௌலி வெளிப்படைப் பேச்சு.

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ். ராஜமௌலி, கடவுள் நம்பிக்கை குறித்து வெளிப்படையாகப் பேசியது...