சினிமாசெய்திகள்

சிவாஜியின் இறுதி ஊர்வலத்தை ஒற்றை சிங்கமாய் வழிநடத்திய விஜயகாந்த்: வைரல் வீடியோ

dc Cover 2u8so3m56226q72ole3hda88m0 20171014074245.Medi
Share

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், நடிகர் திலகம் சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் சிங்கமாய் நின்று வழிநடத்திய பழைய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை மியாட் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த கேப்டன் விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனால் விஜயகாந்துக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்து வந்த நிலையில், இன்று காலை 6:10 மணியளவில் மருத்துவ சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டார்.

தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களின் அஞ்சலிக்காக இன்றும், நாளையும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

நாளை(டிசம்பர் 29ம் திகதி) மாலை 4.45 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலத்தில் ஒற்றை சிங்கமாய் நின்று ஒட்டு மொத்த கூட்டத்தையும் கேப்டன் விஜயகாந்த் வழிநடத்தியது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

2001ம் ஆண்டு ஜூலை 21ம் திகதி நடைபெற்ற சிவாஜி அவர்களின் இறுதி ஊர்வலத்தின் போது கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் சிவாஜியின் வீட்டிற்கு முன்பு குவிந்தது.

இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், சிவாஜியின் அவர்களின் உடலை எடுத்து செல்வதில் தாமதம் ஏற்பட்டது, உடனடியாக வேட்டி சட்டையுடன் இருக்கும் விஜயகாந்த் கையில் இருந்த துண்டுடன் மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...