r1
சினிமாசெய்திகள்

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை: பிக்பாஸ் வீட்டின் நிலை என்ன?

Share

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை: பிக்பாஸ் வீட்டின் நிலை என்ன?

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பிக் பாஸ் வீடு சிக்கியுள்ளதா, உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் நிலை என்ன என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 நடந்து கொண்டிருக்கிறது.

இதில் போட்டியாளராக கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்‌ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டார்கள்.

இதில் பலர் வெளியேறி, புதிதாக இரண்டு பேர் உள்ளே இருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக வெள்ளம் வந்து பிக் பாஸ் வீடு மூழ்கியுள்ளதா என ரசிகர்கள் இணையத்தில் கேட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் வீடு வெள்ளத்தில் மூழ்கியதா?
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பிக் பாஸ் வீடு சிக்கியுள்ளதா, உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் நிலை என்ன என்பது குறித்து ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஏனெனில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதே போல் வெள்ளம் ஏற்பட்டிருந்தது. ஆகவே வீட்டிற்குள் இருந்து போட்டியாளர்கள் நட்சத்திர விடுதி ஒன்றில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை: பிக்பாஸ் வீட்டின் நிலை என்ன? | Bigg Boss Contestants Situation Michaung Cyclone

அதுபோலவே இந்த ஆண்டும் சென்னையானது வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கியுள்ளது. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு எந்தவொரு பாதிப்பு எற்படவில்லை என பிக் பாஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் பொதுமக்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள்.

அதாவது, வேலை முடிந்து வீட்டுக்கு பார்த்து பாதுகாப்பாக போங்க. ஆங்காங்கே மரங்கள் விழுந்திருக்கும், வயர் கட்டாகி கிடக்கும், மழையில் ரொம்ப ரிஸ்க் எடுக்காதீங்க. எங்களுக்காக உழைக்குறவங்களும் பாதுகாப்பா இருக்கணும். நாங்க இங்கு பாதுகாப்பாக இருந்தாலும் எங்க நினைப்பு எல்லாமே வெளியில் தான் உள்ளது.

எல்லோருமே சென்னை வெள்ளத்தைப் பார்த்திருக்கிறோம். எல்லோரும் ஒருத்தருக்கொருத்தர் பாத்துக்குங்க. கண்டிப்பாக உங்களுக்காக நாங்க எல்லாருமே வேண்டிக்கொள்கிறோம்” என தினேஷ் கூறியுள்ளார்.

மேலும் பொது மக்களுக்காக அனைத்து போட்டியாளர்களும் பிராத்தனை செய்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...